Saturday, June 18, 2016

குரூப் - 1 தேர்வு ’ரிசல்ட்’ வெளியீடு

கடந்த, 2015ல் நடந்தகுரூப் - 1தேர்வுக்கான முடிவுகளைதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானடி.என்.பி.எஸ்.சி.,வெளியிட்டு உள்ளது.

தமிழக அரசு துறையில்காலியாக உள்ள துணை கலெக்டர்கள்டி.எஸ்.பி.உதவி வணிகவரித் துறை கமிஷனர்மாவட்ட பதிவாளர்கள் உள்ளிட்ட, 79காலியிடங்களை நிரப்படி.என்.பி.எஸ்.சி.,யின்,குரூப் - 1 மெயின் தேர்வு, 2015 ஜூனில் நடந்தது.
இதற்கான முதல்நிலை தேர்வு எழுதிய, 4,282 பேர்,குரூப் - 1 மெயின் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர். ஆனால், 3,407 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். இந்த தேர்வுசென்னையில் மட்டும், 43மையங்களில் நடந்தது. 
இந்நிலையில் தேர்வு முடிவுகள்டி.என்.பி.எஸ்.சி.இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி, 164 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்குஜூலை, 4 மற்றும், 5ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்க்கப்படும். பின்நேர்முக தேர்வுக்கான பட்டியல் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment